நம் சேர்மன்
- NamZone6

- Dec 19, 2023
- 1 min read
நாள்: 15/12/2023
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி 64,67,69 ஆகிய வட்டங்களில் மிக்ஜாம் புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு கட்டணமில்லா மாபெரும் பொது மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து சிறப்பித்தார். இம்முகாமில் பகுதி செயலாளர்கள் வ.முரளிதரன், எ. நாகராசன் MC, பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, வட்ட கழக செயலாளர் முருகன், அதிபதி, ஜார்ஜ், குமார், MJC பாபு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் மிக்ஜாம் புயலில் களத்தில் நின்று பணியாற்றிய முன்கள பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களை அழைத்து அறுசுவை உணவு வழங்கி நலத்திட்ட பொருட்களை வழங்கினார். உடன் மு.சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அண்ணன் C.மகேஷ்குமார், வட்ட செயலாளர் P. அதிபதி, கழக நிர்வாகிகள் இருந்தனர்.

















Comments