நம் சேர்மன்
- NamZone6

- Feb 20, 2024
- 1 min read
நாள்: 19/02/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் முத்துகுமரப்ப சாலை, ஜி.கே.எம் காலனி 15வது தெருவில் நடைபெறும் பல்வேறு பணிகளை துரிதப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். பின்னர் லோகோ ஒர்க்ஸ் 1வது மற்றும் 2வது சந்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து ஆய்வுமேற்கொண்டார். உடன் மண்டல அலுவலர், செயற்பொறியாளர், துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து ரங்கசாய் தெருவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளியை ஆய்வு மேற்கொண்டார். உடன் RDC பிரவீன்குமார், மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள், துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள், தலைமை ஆசிரியர் இருந்தனர்.

















Comments