நம் சேர்மன்
- NamZone6

- Jul 17, 2024
- 1 min read
நாள்:15/07/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் தலைமையில் 6வது மண்டல அலுவலகத்தில் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணக்கத்திற்குரிய மேயர் பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC, RDC பிரவீன் குமார், மானிட்டரிங் ஆஃபிஸர் கணேசன், மண்டல அலுவலர் செயற் பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்குட்பட்ட மார்கெட் தெருவில் கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய துரிதநடவடிக்கை மேற்கொள்ள சென்னை குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்ட செயலாளர் அதிபதி சென்னை குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் இருந்தனர்.

















Comments