நம் சேர்மன்
- NamZone6

- Jul 21, 2024
- 1 min read
நாள்:20/07/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் வார்டு 68க்குட்பட்ட பெரியார் நகர் 12வது தெருவில் நடைபெற்று வரும் சென்னை குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய பணி, மற்றும் பெரியார் நகர் K5 காவல் நிலையம் கட்டிட பணியை தலைமை செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா IAS ஆணையர் திரு. J.குமரகுருபரன் IAS மற்றும் RDC பிரவீன் குமார் IAS, பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாமன்ற உறுப்பினர் அமுதா சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் மண்டல அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்கு உட்பட்ட கோவிந்தராஜலு தெரு, பிஸ்சட் சாலை மற்றும் மார்கெட் தெருவில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட பிரதிநிதி ஆரோக்கிய தாஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

















Comments