top of page
Search

நம் சேர்மன்



நாள்:25/11/2024


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் வார்டு 67க்கு உட்பட்ட ஜமாலியா ஹவுசிங் போர்டு பகுதியில் புதிய மெட்ரோ வாட்டர் மற்றும் கழிவுநீர் பைப் லைன் பதியும் பணி இன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர், பொது குழு உறுப்பினர் திருமதி சரிதா மகேஷ்குமார் MC, மாமன்ற உறுப்பினர் தாவூத்பீ MC மற்றும் குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் இருந்தனர்.


தொடர்ந்து வார்டு 70க்கு உட்பட்ட பெரம்பூர் ரமணா நகர் கௌதமபுரம் ஹவுசிங் போர்டில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீதனி MC மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று அதிகாரிகள் இருந்தனர்.


தொடர்ந்து வார்டு 69க்கு உட்பட்ட முத்துகுமரப்ப சாலையில் நடைபெற்று வரும் சமுதாய நலக்கூடம் கட்டிட பணி,ரங்கசாய் பள்ளி கட்டிட பணி மற்றும் ரங்கசாய் பூங்கா ஆகிய பல்வேறு இடங்களை DC ஒர்க்ஸ் திரு V.சிவகிருஷ்ணமூர்த்தி IAS பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர், பொது குழு உறுப்பினர் திருமதி சரிதா மகேஷ்குமார் MC, அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மண்டல அலுவலர், மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page