top of page
Search

நம் சேர்மன்


நாள்:18/06/2025


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் தலைமையில் மண்டலம் அலுவலகத்தில் தூய்மை பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர், செயற் பொறியாளர், மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.


பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சென்னை குடிநீர் வாரியம் சார்பாக மக்கள் அதிகம் கூடும் 50 இடங்களில் கட்டணமில்லா திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வின் தொடர்பாக வார்டு 69க்கு உட்பட்ட லோகோ ஸ்கீம் தெருவில், லோகோ மேம்பாலம் அருகிலும் துவங்கப்பட்டது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொது குழு உறுப்பினர் திருமதி சரிதா மகேஷ்குமார் MC,

வட்ட செயலாளர் அதிபதி, மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள்மற்றும் வட்ட கழகநிர்வாகிகள் இருந்தனர்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page