நம் சேர்மன்
- NamZone6

- Sep 9
- 1 min read
நாள்:07/09/2025
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்கு உட்பட்ட செங்கல்வராயன் தெரு, ஜி.கே.எம் காலனி 10வது தெரு, ஜி.கே.எம் காலனி 11வது தெரு, முத்துக்குமரப்ப சாலையில் நடைபெற்று வரும் சமுதாய நல கூடம் பணி போன்ற பல்வேறு இடங்களை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து செங்கல்வராயன் தெருவில் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு சமபந்தி போஜனம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொது குழு உறுப்பினர் திருமதி சரிதா மகேஷ்குமார் MC
தலைமை செயற்குழு உறுப்பினர் சி. மகேஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடன் வட்டசெயலாளர் அதிபதி, மாவட்டபிரதி நிதி ஆரோக்கியதாஸ், பாகமுகவர் இளவரசன், மற்றும் கழக உடன்பிறப்புகள் இருந்தனர்.























Comments