நம் சேர்மன்
- NamZone6

- Sep 27
- 1 min read
நாள்:19/09/2025
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்கு உட்பட்ட ரங்கசாய் தெருவில் நடைபெற்று வரும் மாநகராட்சி பள்ளி கட்டிடம் பணி, சோமையா தெருவில் உள்ள பள்ளி கட்டிடம் பணி,மற்றும் ரங்கசாய் பூங்கா விளையாட்டு மைதானம், சோமையா தெருவில் உள்ள சுகாதார நிலையம் கட்டிடம் பணி,அமிர்தம்மாள் காலனியில் உள்ள பூங்கா போன்ற பல்வேறு இடங்களை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். உடன் செயற் பொறியாளர், மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டலத்தில் 40வது வார்டு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் பொது குழு உறுப்பினர் திருமதி சரிதாமகேஷ்குமார் MC அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள் மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

















Comments